ஆயுதா 17

காலை நேரம் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தாள் அலுவலகத்திற்கு இன்று முதல் நாள் நேரம் தவறாமை வேண்டும், சில கட்டுப்பாடுகள் அவளுக்கு உண்டு. பொறுப்பான பெண்ணாக அவள் கடந்து வந்த பாதை அவளை மாற்றி இருந்தது. குழந்தைகளிடம். யது மது ரெண்டு பெரும் அம்மா சொல்றத கேளுங்க. அம்மா இன்னைலேந்து வேலைக்கு போக போறேன். நீங்க சாயந்திரம் வர்றதுக்குள்ள வந்துருவேன். யார் கூப்பிட்டாலும் போக கூடாது. யார் எது குடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாது. எந்த பொண்ணுங்ககிட்டையும் வம்புக்கு போகாதீங்க. யாரையும் அடிச்சுடாதடா மது. கேட்ட பேர் வாங்காம நல்ல கொழந்தேலா நடந்துக்கணும் சரியா. அம்மா போர் அடிக்குது மா திரும்ப திரும்ப அதையே சொல்லிண்டிருக்க. டேய் அம்மாவை ஒன்னும் சொல்லாதடா. இருவரும் வாக்கு வாதம் ஆரம்பித்த நேரம் வேன் வந்துவிட்டிருந்தது. டேய் ரெண்டு பெரும் சண்டை போடாம போங்கடா பை என்று இவள் கிளம்ப ஓடினாள்.

உடை மாற்றிக்கொண்டு சுவாமி படம் முன் நமஸ்கரித்து வீட்டை பூட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தை கிளம்பினாள். அலுவலகத்திற்குள் நுழைந்தாள் யாரும் வந்துவிட வில்லை. ஒரே ஒரு மேலாளர் மட்டுமே வந்திருந்தார். யாரும்மா நீ கேட்டார். இன்னைலேந்து புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கிறேன் சார். சரிம்மா உக்காரு சார் கிட்ட கேட்டு உனக்கு என்ன வேலை எல்லாம் சொல்றேன். சரி சார். ஒவ்வொருவராக வர ஆரம்பித்து இருந்தனர். அந்த மேலாளர் ஆதித்யா விற்கு போன் செய்து ஆயுதா வந்ததை தெரியப்படுத்தினார். ஆயுதாவிற்கு உடலில் ஒரு பதற்ற்றம் இருந்தது. வெகு நாட்களுக்கு பின் சேர்ந்த வேலை எந்த தவறும் நடக்காமல் வேலை உண்டு தான் உண்டு என்று இருக்க வேண்டும். எந்த அவப்பெயரும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவளுக்கு இப்போது குழந்தைகள் தான் உலகம்.

ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் மனதில். அந்த மேலாளர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் எனக்கு வேலை சொல்லித்தரும்படியும் அவர் வந்த பிறகு எனக்கான பொறுப்புகள் தரப்படும் என்றும் கூறினார். ஆயுதா சென்று அவளருகில் அமர்ந்து கொண்டு சில சின்ன சின்ன வேலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். மணி 11 தொட்டது. ஆதித்யா வந்தார். ஆயுதா காலை வணக்கத்தை தெரிவித்தாள். சாதாரணமாக இருங்க ஏன் இப்படி பதட்ட படறீங்க. அப்படிலாம் இல்ல சார். புதுசா இருக்கு அதான் கொஞ்சம். சரி ஆய்டும். சரி உங்களுக்கு என்னென்ன வேலை யார் கிட்ட நீங்க reporting எல்லாம் சொல்லிடறேன் நோட் பண்ணிக்கோங்க. சரி சார் என்று கூறியவுடன் என்னிடம் ஒரு டைரி நீட்டினார். இதுல நீங்க டெய்லி basis ல எல்லாத்தையும் நோட் பண்ணிக்கோங்க அப்போ அப்போ எனக்கு தெரிய படுத்துங்க. ஏதாவது என்கிட்டேந்து வேணும்னா சொல்லுங்க என்றார். அவளுக்கான பொறுப்புகள் வரையறுக்கப்பட்டது.

தினம் தினம் என்ன என்ன எப்போது செய்யவேண்டும் என்பதெல்லாம் எழுதிக்கொண்டாள். உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் குடுக்க சொல்றேன் அதுல நீங்க எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு வெச்சுக்கோங்க என்று கூறிவிட்டு நீங்க போகலாம் என்று ஆயுதாவை அனுப்பி வைத்தார். ஆயுதாவிற்கு எதுவும் புரியவில்லை. ஆனால் இதுதான் இப்போது தனக்கு பாதுகாப்புடன் கூடிய வேலையாக தோன்றியது. முதல் 4 நாட்கள் வேளையில் பெரிய மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. எல்லாவற்றையும் கேட்டு கேட்டு செய்யவேண்டிய கட்டாயமே இருந்தது. சிலர் சொல்லிக்கொடுக்கையில் முகம் சுளிப்பது தெரிந்தது. இருந்தாலும் வேறு வழி கிடையாது. ஆதித்யா அவர் அலுவலகத்தின் முதலாளி எல்லாவற்றையும் அவரிடம் சென்று கேட்பது நாகரீகம் அல்ல. அதனால் தானே சில விஷயங்களை தேடி தேடி தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லா வேலைகளையும் தாமதமாகவே செய்து வந்தாள்.

இது ஆதித்யாவின் பொறுமையை சோதித்து பார்த்து விட்டது. அடிக்கடி அவரை கோவம் கொள்ள செய்தது. அலுவலகம் இப்படி என்றால், வீட்டில் குழந்தைகள் வீட்டு வேலை என்று எல்லாமே சுமையை அதிகப்படுத்தி இருந்தது. தினம் தினம் ஒரு சோதனையாகி போனது. அடிக்கடி குழந்தைகளுக்கு உடலில் நோய்கள் வர ஆரம்பித்து இருந்தது. காரணம் ஆயுதாவால் அவளது குழந்தைகளை கவனிக்கும் நேரம் குறைந்து இருந்ததே காரணமாக இருந்தது. குழந்தைகள் சரியாக சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது கூட கண்கணிக்க வேண்டிய வயதில் இருப்பவர்கள். ஆயுதா வேலைக்கு சென்று விட்டு வரும் நேரத்தில் அவர்களின் இந்த வேலைகளை கவனிப்பதை காட்டிலும் நாளைக்கு தான் அலுவலகத்திற்கு செல்லும் முன் செய்யவேண்டிய வேலைகள் மட்டுமே பெரிய விஷயமாக இருந்தது. நின்று யோசிக்க கூடிய நிலையில் கூட இல்லை ஆயுதா. இந்நிலையில் யதுவை மருத்துவ மனையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் வந்தது. அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு குழந்தையை கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டாள். அப்போது தான் அவளுக்கு தான் எங்கு தவறு செய்தோம் என்று உணர முடிந்தது. என்ன தான் ஒரே தனி ஆளாய் இருந்து பிள்ளைகளை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து வளர்த்தாலும், தாய் கொடுக்க வேண்டிய அன்பு என்பது யாராலயும் சரி செய்ய முடியாது என்பதே அது. இதனை கொஞ்ச நாளாக மறந்து போய் இருந்தாள். இப்போது தான் தாயுமானவனாக மாற வேண்டும் என்பதை புரிந்து கொண்டாள். எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளிலும் தான் தன்னுடைய நிலையில் இருந்து மாறிவிட கூடாது என்பது இப்போது அவளுக்கு புரிந்து இருந்தது. அலுவலக வேலைகள் பழகவில்லை என்பதனால் வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் தான் இவைகள். இப்போது கொஞ்சம் வேலைகள் புரிந்து கொள்வதிலும் குழந்தைகளை கவனிப்பதிலும் புது முயற்சிகளை கையாள வேண்டும். யோசனை செய்ய ஆரம்பித்தாள். அலுவலகத்தில் ஆதித்யாவிற்கு இவள் மீதிருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அவளை நம்பி ஏற்கனவே வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களை வேறு வேலைக்கு மாற்றி இருந்தார். இப்போது எப்படி சரி செய்வது என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருந்தார். யது ஹோச்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்து இருந்தான். இருவரையும் பழைய மாதிரி பள்ளிக்கு அனுப்பிவிட்டாள். அலுவலகத்திற்கு சீக்கிரம் செல்ல ஆரம்பித்தாள். அப்போதுதான் மாலை சீக்கிரம் கிளம்ப முடியும் என்ற எண்ணத்தில். புது முயற்சிகளில் நிறைய வேலைகள் அவளுக்கு பழக ஆரம்பித்தது. எல்லா வேலைகளிலும் முன்னைவிட எளிதில் முடிக்க திட்டங்கள் போட்டுகொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தாள். ஒரு நாள் நல்ல காய்ச்சல் ஆயினும் வேலைக்கு சென்றாள். ஆதித்யா இவளுக்கு ஒரு வேலை புதிதாக allocate செய்திருந்தார். வேலைக்கு சென்று விட்டாள் ஆயினும் அவளால் முடியவில்லை. ஆதித்யா கவனித்து விட்டார். ஆயுதா நீங்க வீட்டுக்கு போங்களேன் முடியலேன்னா. இல்ல சார் பரவால்ல, இந்த வேலைய முடிச்சுட்டு போறேன் என்று வேளைகளில் தன்னை திணித்துக்கொண்டாள். இப்படியே நல்ல முன்னேற்றத்துடன் சென்று கொண்டிருந்தது அவளது அலுவலக வேலை மற்றும் குழந்தைகள் நலமும். வேலைக்கு சேர்ந்த 3 மாதங்களில் நல்ல பெயர் சம்பாதிக்க ஆரம்பித்தாள். 8 மாதங்களில் அவளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 2 சம்பள உயர்வும் கிடைத்து இருந்தது. இந்நிலையில் அவள் ஒருநாள் அவளது கல்லூரி நண்பன் அரவிந்தை சந்திக்க நேர்ந்தது. ஏண்டா அவனை பார்த்தோம் என்கிற அளவுக்கு அவளை சீரழித்து சென்றான்.

Bạn đang đọc truyện trên: TruyenTop.Vip